(இராஜதுரை ஹஷான்)
வடக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளவே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ 13ஆவது அரசியலமைப்புக்கு அப்பால் சென்று அதிகாரத்தை பகிர்வதாக குறிப்பிடுகிறார். அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சஜித் பிரேமதாஸ பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையினை சுயமாக இராஜனாமா செய்வேன். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சவால்விடுத்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கி இராணுவத்தினரை படுகொலை செய்ய வழி செய்தார் என்பது தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இவரை பின்பற்றியே சஜித் பிரேமதாஸ 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை பிளவுபடுத்த முயல்கிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மை ஆதரவை பெற்று பிரதமராகினால் நான் நிச்சயம் எனது பாராளுமன்ற உறுப்புரிமையை சுயமாக இராஜினாமா செய்வேன் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு தனி சிங்கள பௌத்த மக்களும், கத்தோலிக்க மக்களும் வாக்களிக்கமாட்டார்கள். இதன் காரணமாகவே இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவை எதிர்பார்த்து நடைமுறையில் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் படுதோல்வியடையும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.
போதைப் பொருள் கடத்தலுடன் பொலிஸாரும் தொடர்புப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. விசாரணை நவடிக்கைகள் சுயாதீனமான முறையில் இடம் பெறுகின்றன. எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பாதாள குழுவினரை இல்லாதொழித்து பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதியின் இலக்கு. பொதுத் தேர்தலை தொடர்ந்து இந்த இலக்கு முழுமைப்படுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment