24 மணித்தியாலங்களில் 1,779 பேர் கைது - சுமார் 35 இலட்சம் லீற்றர் மதுபானம் மீட்பு - துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 2, 2020

24 மணித்தியாலங்களில் 1,779 பேர் கைது - சுமார் 35 இலட்சம் லீற்றர் மதுபானம் மீட்பு - துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்பு

கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் நேற்று (01) வரையான 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,779 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள், ஆயுதங்கள், வெடி பொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 292 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த 720 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 198 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 161 பேரும், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 பேரும், வெடி பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 389 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளில் ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 07 உம், நாட்டுத் துப்பாக்கி 01 உம், தோட்டாக்கள் 105 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கைகளில் கைக்குண்டுகள் 07 உம், சட்டவிரோத மதுபானம் 3,497,875 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment