கொவிட் -19 காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், தாய்லாந்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 70 பேர், நேற்றிரவு (17) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மாலைதீவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் அவர்கள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மாலைதீவு விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று நேற்றிரவு 7.30 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகளும், அவர்களின் பயணப் பொதிகளும் இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது. அத்தோடு, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment