இலங்கையில் கொரோனா பரவல் கட்டமைப்பு எவ்வாறு வியாபித்ததென பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறும் தகவல்கள் ! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

இலங்கையில் கொரோனா பரவல் கட்டமைப்பு எவ்வாறு வியாபித்ததென பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறும் தகவல்கள் !

(எம்.எப்.எம்.பஸீர்) 

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து கொரோனா தொற்றாளர்களும் 31 கொத்தணிகள் ஊடாகவே பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் தற்போது 4 கொத்தணிகளே செயற்பாட்டு நிலையில் உள்ளதாகவும் ஏனைய 27 கொத்தணிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டதாகவும், பொலிஸ் சட்ட பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

இந்நிலையில் தற்போதும் செயற்பாட்டு மட்டத்தில் உள்ள 4 கொரோனா கொத்தணி பரவல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 14 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, ஜா எல - சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஒரு போதைப்பொருள் பாவனை நபரால், கிராண்பாஸ் - நாகலகம் வீதி, குணசிங்கபுர மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவி இருந்ததாவும், அப்பகுதிகளில் கொரோனா பரவியமையானது ஒரு கொத்தணி பரவல் சம்பவமாக கண்டறியப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, உண்மையில் இந்த போதைப்பொருள் பாவனை தொற்றாளர்களால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புத் தொகுதிகள், தோட்டங்கள் மிக்க அபாயங்களை எதிர் நோக்குகின்றனர். அதனால் யாரென்று அறியாத ஒருவர், உங்கள் குடியிருப்புத் தொகுதியிலோ, தோட்டப் பகுதியிலோ உள் நுழைந்தால், அல்லது தங்கி இருந்தால், அது குறித்து அருகே உள்ள பொலிஸ் நிலையத்துக்கு, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். 

அவ்வாறு அப்பகுதியுடன் தொடர்பற்ற எவருக்கேனும் தங்குமிடம் வழங்கினால், அதனை வழங்கும் வீட்டு உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் ' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment