காத்தான்குடியில் பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

காத்தான்குடியில் பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு

காத்தான்குடி ஸலாமத் ஜும்ஆப்பள்ளிவாயலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று (05) அதிகாலை இடம் பெற்றுள்ளது.

காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள ஸலாமத் ஜும்ஆப்பள்ளிவாயலின் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியல் பெட்டியொன்று உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பள்ளிவாயலுக்குள் இருந்த சிறிய அலுமாரியும் உடைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாயல் மூடப்பட்டிருந்த நிலையிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக பள்ளிவாயல் நிருவாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.எஸ்.எம். நூர்தீன்)

No comments:

Post a Comment