என்னதான் உயிர் நன்பர்களாக இருந்தாலும் அரசியல் என்ற ஒன்று வருகின்ற போது இண்டாக பிரிபட்டு எதிரிகளாகவே மாறுகின்றனர்.
அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்த பின் ஒரே இடத்தில் அமர்ந்து சகஜமாக பேசிக் கொண்டிருப்பார்கள் ஆனால் அவர்களுக்காக போராடிய தொண்டர்கள் நாளைக்கு அவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தோசத்திலோ துக்கத்திலோ பங்கு கொள்ள முடியாமல் ஒருத்தருடைய முகத்தை இன்னொருவர் பார்க்காமல் செல்வார்கள்.
இன்று சமூக வளைத்தளங்களில் பார்க்கும் போது நமக்கே வெட்கமாக உள்ளது அற்ப அரசியலுக்காக ஒருவரை எவ்வாறெல்லாம் கேவலாம விமர்சிக்கின்றார்கள்.
படித்தவர்கள் முதல் பாமரன் வரை வயது வித்தியாசமின்றி கேவலமான வார்த்தை பிரயோகங்கள் மூலம் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் அவர்களுடைய தனிப்பட்ட விடயங்களை தோண்டியும் விமர்சித்து அவர்களது அசில் புத்தியை இந்த வளைத்தளங்களில் பதிவேற்றுகின்றனர்.
நீங்கள் ஒருவர் மீது வைத்துள்ள விசுவாசத்திற்காக ஏன் மற்றவர்களை கேவலமாக நோக்குகின்றீர்கள் உங்களுடைய விசுவாசத்தை அவர் மீது நல்ல முறையில் காட்டுங்கள் அதற்காக மற்றவரை கேவலமாக விமர்சித்து அவர் செய்த பாவத்தை அழித்து அவருக்கு நன்மையை பெற்றுக் கொடுக்காதீர்கள்.
வெற்றி தோல்வி என்பது படைத்தவன் தீர்மானிக்கும் ஒன்று முயற்சியே நமது மூலதனம் வெளியீடு படைத்தவனால் வழங்கப்படும். உங்கள் முயற்சியை சிறந்த முறையில் முன்னெடுங்கள் படைத்தவன் நினைத்தால் வெற்றி உங்களை தேடி வரும்.
சமுக வளைத்தளம் என்பது நமது நன்பர்களோ நமது ஊரில் உள்ளவர்கள் மாத்திரம் பார்க்கும் ஒன்றல்ல பரந்து விரிந்த இந்த உலகமே உற்று நோக்கும் ஒன்று.
எனவே இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி மற்றவர்கள் மத்தியில் நம்மை பற்றி ஓர் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குவது நாம் அதனை பயன்படுத்தும் முறையிலே தங்கியுள்ளது.
றிபான் இஸ்மாயில் - ஓட்டமாவடி
No comments:
Post a Comment