கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 14, 2020

கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை

பிரதான எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூடடணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து கடந்த 10 வருட காலத்தில் தமிழரசுக் கட்சித் தலைமை எதனை பெற்றுத்தந்துள்ளது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்முனை பிரதேச செயலகத்தை கூட தரம் உயர்த்த முடியாமல் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை எனவும் ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் வருடாவருடம் ஆளும் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒரே ஒரு எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

அத்துடன், இதன்போது பேசப்பட்ட பேரங்கள் சொந்த நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment