மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி நியமனம்

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி, மார்ஷல் ஒப் த எயார் போஸ், ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

2006 ஜூன் மாதம் 12 ஆம் திகதி விமானப் படையின் 12 ஆவது விமானப் படைத் தளபதியாக பதவியேற்ற ரொஷான் குணதிலக்க 2011 பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஓய்வுபெற்றார்.

வானூர்தி நிபுணராக நீண்ட காலம் சேவையாற்றிய ரொஷான் குணதிலக்க, இலக்கம் 03 கடல் கண்காணிப்பு படையணி மற்றும் 04வது வானூர்தி படையின் கட்டளை அதிகாரியாகவும் சிறிது காலம் சேவையாற்றியுள்ளார்.

விமானப் படையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர், விமானப்படை தளபதியாக பதவி வகிக்கையில் விமானப் படையின் பல்வேறு துறைகளை நவீனமயப்படுத்தி வெற்றிகரமாக யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர பங்களிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment