சீனப் பொறியியலாளர்கள் மூவரை தனிமைப்படுத்துமாறு பொலிஸில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 14, 2020

சீனப் பொறியியலாளர்கள் மூவரை தனிமைப்படுத்துமாறு பொலிஸில் முறைப்பாடு

வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில் சீன நாட்டு பிரஜைகள் மூவர், வீடொன்றில் தங்கியிருந்த தகவல், சமூக ஆர்வலர்கள் சிலருக்கு பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களை அங்கிருந்து அகற்றி தனிமைப்படுத்துமாறும் சிகிச்சையளிக்குமாறு பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘மன்னார் - வவுனியா பிரதான வீதியில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் மூன்று பொறியியல்துறை சார்ந்த சீன நாட்டுப் பிரஜைகள் தங்கியிருந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டினூடாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இலங்கை வந்துள்ளார். ஏனைய இருவரும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே சீனாவிலிருந்து இலங்கைக்கு விமான நிலையத்தினூடாக வருகை தந்துள்ளனர். அவர்கள் கடந்த சில வாரங்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்து வந்துள்ளனர்.
எனவே அவர்களுக்கு கொரோனா தொற்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தி வைத்திருக்குமாறும் அப்பகுதியிலிருந்து அவர்களை அகற்றுமாறும் பொலிஸாருக்கு நேற்று இரவு, சமூக ஆர்வலர்கள் சிலரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு, 10 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சீன நாட்டு பிரஜைகள் தங்கியுள்ள வீட்டின் பாதுகாப்பு ஊழியரிடம் விசாரணைகள் மேற்கொண்டதுடன் அவர்களை அங்கு தங்கவைக்க நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகளுடனும் மாவட்ட அரசாங்க அதிபருடனும் தொடர்பு கொண்டு, அவர்கள் இலங்கைக்கு வருகை தந்த ஆவணங்கள், அறிக்கைகள் என்பனவற்றை பரிசோதனை மேற்கொண்டனர்.

அத்தோடு, வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான ஆரம்ப பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா விஷேட நிருபர்

No comments:

Post a Comment