இன்று மாலை 6.00 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தீர்மானத்தை அடுத்து அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று (20) பிற்பகல் 3.30 மணி முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் கட்டுப்பாட்டு நிலையம் இது தொடர்பாக தெரிவிக்கையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ரயில் சேவை கொழும்பு கோட்டையில் இருந்து மகாவ வரையில் சேவை இடம்பெறும்.
மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே மேற்படி ரயில் சேவையை இடை நிறுத்தியதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment