ஷவேந்திர சில்வா மீதான தடையை மறுபரிசீலிக்குமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2020

ஷவேந்திர சில்வா மீதான தடையை மறுபரிசீலிக்குமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz)இன்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தபோது இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, இராணுவத் தளபதி மீது விதிக்கப்பட்ட பயணத் தடை குறித்தான இலங்கை அரசின் ஆட்சேபனையையும் அமெரிக்க தூதுவருக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் அமெரிக்க அரசிற்கு விளக்குவதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளியுறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment