புத்தளத்தில் வெடிபொருட்கள் மற்றும் கேரளக்கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இளைஞர்கள் சிலரை சோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்கள் வசமிருந்த 12 மில்லிமீட்டர் வகையிலான 5 வெடிபொருட்களும் 3 கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கேரளக்கஞ்சாவை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், சந்தேகநபர்கள் குறித்த வெடிபொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment