தணமல்வில, குடாஓயா அலி வங்குவ பகுதிக்கு அருகில் இன்று (05) இடம்பெற்ற வாகன விபத்தில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மாத்தறையிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றும் எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பஸ் வண்டி மற்றும் டிப்பர் வாகனச் சாரதிகள் உட்பட 29 பயணிகள் படுகாயமடைந்ததை தொடர்ந்து, அவர்கள் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment