200 மில்லியன் டொலர் போதைப் பொருள் சிக்கியது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

200 மில்லியன் டொலர் போதைப் பொருள் சிக்கியது

சில்லி சோஸில் மறைத்து அமெரிக்காவிலிருந்து சிட்னிக்கு நூதன முறையில் கடத்தி செல்லப்பட்ட 400 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்த பொலிஸார், 4 பேரை கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து சிட்னிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட சில்லி சோஸ் பொதியில், கிறிஸ்டல் மெத் எனும் வகை போதைப் பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கடந்த 15ஆம் திகதி அவுஸ்திரேலியா அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி சிட்னி சரக்கு நிலையத்திற்கு வந்த சில்லி சோஸ் பொதிகளை ஆய்வு செய்தபோது சில்லி சோஸ் போத்தலில் வெள்ளை நிற ‘கிறிஸ்டல் மெத்’ போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சுமார் 200 மில்லியன் டொலர் மதிப்பிலான போதைப் பொருள் கலந்த சில்லி சோஸை பறிமுதல் செய்த பொலிஸார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment