வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தல்

தற்போது வெற்றிடமாகவுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தி, குருணாகல் மாவட்ட தெரிவுக்குழு அதிகாரிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சாலிந்த திசாநாயக்க காலமானதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment