9ஆம் திகதி கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

9ஆம் திகதி கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பு மனு கோரப்படும் திகதியும் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு, மாவட்ட ரீதியில் முறைப்பாட்டுக் குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

No comments:

Post a Comment