நெல் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டே 109,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

நெல் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டே 109,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நெல் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டே அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தருவிக்கப்பட்ட அரிசி யாவும் உரிய அனுமதியைப் பெற்றே, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசியாலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் 109.000 மெற்றிக் தொன் அரசியை வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு இறக்குமதி செய்யத் தீர்மானித்தது. இதில் 68.000 மெற்றிக் தொன் நாட்டு அரிசி, 25 ஆயிரம் மெற்றிக் தொன் சம்பா அரிசி மற்றும் 14 ஆயிரம் மெற்றிக் தொன் வெள்ளை அரிசி உள்ளடங்கியிருந்தன. 

2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையான காலப் பகுதியில் கூட்டுறவு மொத்த நிறுவனங்களால் இந்த இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டன.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்துக்கு அமைய சதோச நிறுவனத்தின் ஊடாக இந்த இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில், நாட்டில் நிலவிய மோசமான காலைநிலை காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதால், அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் தேவையானளவு அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கமைய 300.000 மெற்றிக் தொன் அரசியை அரசாங்கமும், 200,000 மெற்றிக் தொன் அரிசியை தனியார் துறையின் ஊடாகவும் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment