வத்தளையில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இரண்டு பேரை சுட்டுக்கொலை செய்தமை தொடர்பில் தேடப்பட்டு வரும் இருவர் தொடர்பாக பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளது.
இக்கொலைகளுக்கு திட்டமிட்டவர்கள் என ‘பூக்குட்டி கண்ணா’ என்றழைக்கப்படும் பாலசந்திரன் புஷ்பராஜா, ‘பும்மா’ ‘ராஜு, ‘விஜேந்திரன்’ என்றழைப்படும் ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ என்ற நபரையுமே பொலிஸார் தேடி வருகின்றனர். ‘பும்மா’ என்பவர் ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாக கொண்டபோதும் வவுனியா, பூந்தோட்டம் அம்மன் கோவிலடி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் தற்போது வத்தளை மற்றும் ஜேம்பட்டா வீதி பகுதியில் நடமாடுவதாகவும் இவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருப்பின் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
களனி பிரிவு பொறுப்பதிகாரி 071 8501589 பேலியகொடை பொலிஸ் பொறுப்பதிகாரி (குற்றப் புலனாய்வு பிரிவு) 077 7594258 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வத்தளை அருள்மிகு ஐயப்பன் கோவிலுக்கு முன்பாக வைத்து இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment