அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 4, 2019

அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது காரைதீவு விபுலானந்தம் சதுக்க முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றது.

இதன் போது நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் சிறிது தூரம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊர்வலமாகச் சென்றதுடன், இறுதியாக ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதில் வெளிவாரிப் பட்டதாரிகளைப் புறக்கணிக்காதே, அரச நியமனத்தில் பட்டதாரிகளுக்கு உள்வாரி, வெளிவாரி என பாகுபாடு காட்டாதே உட்பட பிரிவினையின் வித்தான ஆளும் ஐக்கிய தேசியக்கட்சி அரசே வெளிவாரி பட்டதாரிகளூக்கும் நியமனம் வழங்கு என்ற பதாகைகளை அடங்கிய சொற்களை ஏந்தியவாறும் வெளிவாரிப் பட்டதாரிகள் கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.

மேலும், தங்களுக்கான நியமனங்களை விரைவாக வழங்கக்கோரியும் பட்டதாரிகளுக்கு பாகுபாடு காட்டாமல் இந்த ஆளும் அரசாங்கம் நியமனங்களை வழங்க வேண்டுமென கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்கள். இதில் ஆண், பெண் வெளிவாரிப் பட்டதாரிகள் உயர் தேசிய டிப்ளோமாதாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment