பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் றஹீம் ஆசிரியரின் முயற்சியினால் அறபா நகர் அறபா ஜும்ஆப் பள்ளிவாயல் வீதி புனரமைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் றஹீம் ஆசிரியரின் முயற்சியினால் அறபா நகர் அறபா ஜும்ஆப் பள்ளிவாயல் வீதி புனரமைப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கம்பரெலிய துரித கிராமிய அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி - தியாவட்டவான் அறபா நகர் அறபா ஜும்ஆப் பள்ளிவாயல் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் காணப்பட்ட வீதிகளில் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதுடன், பிரதேச மக்கள் போக்குவரத்து செய்வதிலும் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியரின் அயராத முயற்சியினால் முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்பக்கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மெளலானாவின் கம்பரெலிய துரித கிராம அபிவிருத்தி வேலைத்திட்ட நிதியொதுக்கீட்டில் குறித்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியரின் முயற்சியினால் பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், புனரமைப்புச் செய்யப்படாத வீதிகளை செப்பனிடத்தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேச அபிவிருத்தியிலும் குறிப்பாக மிகவும் அதிதியாவசிய தேவையாகக் காணப்படும் போக்குவரத்து வீதிகளை செப்பனிடுவதற்கு நிதியொதுக்கீடுகளை மேற்கொண்ட முன்னால் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மெளலானாவுக்கும் அதற்கான அயதுழைக்கும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியருக்கும் பிரதேச மக்கள் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறனர்.

No comments:

Post a Comment