கல்முனை பிராந்திய மார்பு நோய்ச்சிகிச்சை நிலையத்தின் புதிய வைத்தியர் விடுதிக் கட்டிடம் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2019

கல்முனை பிராந்திய மார்பு நோய்ச்சிகிச்சை நிலையத்தின் புதிய வைத்தியர் விடுதிக் கட்டிடம் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண சபையின் PSDG நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிராந்திய மார்பு நோய்ச்சிகிச்சை நிலையத்தின் புதிய வைத்தியர் விடுதிக் கட்டிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய மார்பு நோய்ச்சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சனுஸ் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், ஊரின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது நாட்டில் பயங்கரவாதக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக எழுந்து நின்று இரண்டு நிமிடம் பிராத்தனையும் இடம்பெற்றது.

இதன்போது வைத்தியசாலை நிருவாகத்தினால் ஆளுநரின் சேவையினைப்பாராட்டி நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment