யாரோ சர்வதேச தீவிரவாதி செய்த செயலுக்கு ஏன் பள்ளிகளை தாக்குகின்றீர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, May 13, 2019

யாரோ சர்வதேச தீவிரவாதி செய்த செயலுக்கு ஏன் பள்ளிகளை தாக்குகின்றீர்கள்

அன்மை காலமாக இலங்கையில் நடைபெற்றுவரும் சர்வதேச தீவிரவாத செயலுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித சம்மந்தமுமில்லை என்று ஜனாதிபதி சொன்ன பிறகும் முஸ்லிம்கள் மீதும் பள்ளிகள் மீதும் தாக்குதல் நடாத்துவதை வண்மையாக கண்டிப்பதாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம்.என். நஸீர் (MA) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் முகமாக அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று இரவு குருநாகல் மாவட்டத்தின் கின்னியம, பூவெல்ல, யாயவத்த, கரந்தி பொல, குளியாப்பிடிய ஆகிய இடங்களில் உள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிகள், வீடுகள் என பல்வேறு இடங்கள் தாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகள் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் சமூகங்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் இப்படியான தீவிரவாத தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

எனவே இந்த நாட்டை மீண்டும் பின்னோக்கி நகர்த்த சில அன்னிய சக்திகள் முயற்சி செய்து வருகின்றது இவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது இந்த நாட்டை நிர்வகிப்பவர்களின் கடமையாகும்.

சட்டம் அனைவருக்கும் ஒன்று என்பதை இந்த நாட்டில் உள்ள ஒரு இனவாத குழு மறந்து விட்டது இவர்களுக்கு யார் ஆதரவு வழங்கினாலும் அவை அனைத்தும் நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டியதாகும்.

No comments:

Post a Comment