உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் அறிக்கை எதிர்க் கட்சித் தலைவரிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 3, 2019

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் அறிக்கை எதிர்க் கட்சித் தலைவரிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் அடங்கிய குழுவின் அறிக்கை எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இதன்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபகஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்குவதுடன், புலனாய்வுப் பிரிவினை பலமிக்கதாக்க மாற்ற வேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment