மீண்டும் சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2019

மீண்டும் சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை

நேற்றைய தினம் (12) குளியாபிட்டி மற்றும் சிலாபம் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியற்ற சூழலை கருத்திற்கொண்டு, இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள், செயலிகள் மீது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய, சமூக வலைத்தளங்கள் மூலம் போலியானதும், தேவையற்ற தகவல்கள் பரவுவதன் மூலம் எழும் பிரச்சினைகளை தடுக்கும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய Facebook, Whatsapp, Viber, IMO, Snapchat, Instagram, YouTube ஆகிய சமூக வலைத்தளங்கள் மற்றும் அதன் செயலிகள் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து நிகழ்ந்த அனைத்து பிரச்சினைகளின்போதும் அரசாங்கம் உடனடியாக சமூக வலைத்தளங்களை முடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment