நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2019

நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஹோட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். 

இதைப் பார்த்த ஹோட்டல் காவலாளி அவர்களை தடுக்க முயன்றபோது உடனே பயங்கரவாதிகள் அந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

அதன்பின், ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர். தகவலறிந்து வந்த போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஹோட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றர். 

இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment