ஹொரணை - கல்எதடுகொட பகுதியில் ஈசி - கேஷ் முறையில் பணம்பெற்று ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் ஹொரணை மற்றும் வெலிக்கல ஆகிய பகுதிகளில் 3 வாடகை வீடுகளில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேகநபர் வசமிருந்த 25 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
ரத்னபுரி மிஹிதுகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இந்த சந்தேகநபர் காரொன்றில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே தங்கச்சங்கிலி கொள்ளை மற்றும் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment