முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் ஜனாதியாக பெண் தேர்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் ஜனாதியாக பெண் தேர்வு

முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் ஜனாதிபதியாக ஜூஜூனா கபுடோவா 58 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

இந்த தேர்தல், நன்மைக்கும், தீமைக்குமான போராட்டம் என ஜூஜூனா கபுடோவா குறிப்பிட்டார். இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன. 

இதில் ஜூஜூனா கபுடோவா 58 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஆளும் கட்சியின் வேட்பாளர் மாரோஸ் செப்கோவிக்கிற்கு 42 சதவீத வாக்குகள் விழுந்தன. சுலோவாகியா நாட்டில் பெண் ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

No comments:

Post a Comment