கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை ஜனாதிபதி நேரில் சென்று பார்வை - போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு ஜனாதிபதி வாழ்த்து - News View

About Us

About Us

Breaking

Sunday, February 24, 2019

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை ஜனாதிபதி நேரில் சென்று பார்வை - போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு ஜனாதிபதி வாழ்த்து

இன்று (24) நண்பகல் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கையில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட அதிகளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றிய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையின் அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

அவர்களின் சேவையை பாராட்டிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக முன்னெடுக்கப்படும் இந்த உன்னத பணிக்கு தனது ஆசீர்வாதமும், ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு எனத் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் தொகையை ஜனாதிபதி பார்வையிட்டார்.
பொலிஸ் அதிரடிப்படையின் கட்டளை தளபதி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப், பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டீ.ஏ.சி.தனபால ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, கடந்த சுற்றி வளைப்புகள் தொடர்பிலான தகவல்களையும் கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment