மினுவாங்கொடை - கல்லொழுவை, தக்கியா வீதியின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான பாதையைத் துப்பறவு செய்யும் சிரமதானப் பணிகள், இன்று (24) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றன.
தக்கியா வீதியின் இரு மருங்கிலுமுள்ள கால்வாய்கள், புற்பூண்டுகள் மற்றும் குப்பைக்கூளங்கள் என்பன காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையிலான இரண்டு மணி நேரத்திற்குள் முற்று முழுதாகத் துப்புறவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்லொழுவை பிரதேச சுற்றுச்சூழலைத் துப்புறவாக்கும் நோக்கில், குப்பைகளற்ற சிறந்த கிராமமாக உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைவாக இச்சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். கப்பார் ஹாஜி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.எம். சுஹைதர் ஆகியோரது வழிகாட்டலின் கீழ், எம்.எம்.எம். நாளிரின் ஏற்பாட்டில், இச் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மினுவாங்கொடை பொது சுகாதாரப்பரிசோதகர்களான எஸ்.ஏ. அஜித் புஷ்பகுமார (பத்தண்டுவன பிரிவு), கே.பீ.எம்.பீ. வீரசேன (நெதகமுவ பிரிவு) ஆகியோரது மேற்பார்வையின் கீழ் இடம்பெற்ற இச்சிரமதானப் பணிகளில், கல்லொழுவை பிரதேச வாழ் பெரும்பாலான நலன்விரும்பிகள், சிறார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment