மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து எதிர்வரும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தக் கூட்டம் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்கூட்டத்தில், புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்குள்ள பிரச்சினைகள் மற்றும் பழைய முறையில் விரைவில் நடத்துவது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
குறித்த கூட்டத்தில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஆகியோர் கலந்துகொள்வதற்கான இணக்கபாடு கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment