கிழக்கு மாகாண ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

கிழக்கு மாகாண ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமனம்

கிழக்கு மாகாண ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி.அசங்க அபயவர்தன தலைமையில் இன்று மாலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதன்போது மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம், கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபையினுடைய தலைவராக ஜீ.கரீதரன், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவராக எம்.எஸ்.உதுமான் லெவ்வை, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண உள்ளாச பயணத்துறையின் தலைவராக இந்திக நளீன் ஜெயவிக்ரம ஆகியோரும் இத்துறைக்கான பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment