அனைத்துலக உறவுகளுக்கான மஹிந்த ராஜபக்ஷ நிலையத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பிலான ஆவணங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 29ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.
அனைத்துலக உறவுகள், இராஜதந்திரம் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக்கான உலகத்துக்குள் நுழைவதற்காக முதல் படியாக இந்த நிறுவகம் இருக்கும் என மஹிந்த ராஜபக்ஷ தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விரைவில் தேர்தல் ஒன்று நடாத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் என அனைத்துலக உறவுகளுக்கான மஹிந்த ராஜபக்ஷ நிலையத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment