வவுனியாவில் யாழ்தேவியிடம் நிவாரணம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 1, 2019

வவுனியாவில் யாழ்தேவியிடம் நிவாரணம் கையளிப்பு

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடனான யாழ் தேவி புகையிரதம் வவுனியாவில் இருந்தும் வெள்ள நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றது.

இலங்கை ரயில்வே திணைக்களம், ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மாத்தறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து கொழும்பு கோட்டையை வந்தடைந்து இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்தேவி நிவாரணப் புகையிரதம் தனது பயணத்தை வடக்கு நோக்கி ஆரம்பித்திருந்தது.

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்த புகையிரத சேவை இடம்பெற்றது. மதியம் 12.30 மணியளவில் வவுனியாவை வந்தடைந்த புகையிரதத்தில் பொது மக்களால் கையளிக்கபட்ட நிவாரண பொருட்களை வவுனியா புகையிரத நிலைய அதிபர் எஸ்.அகிலேஸ்வரன் வழங்கி வைத்தார்.

No comments:

Post a Comment