நாடாளுமன்றம் நாளை காலை மீண்டும் கூடும் போது மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை தடை செய்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து நாடாளுமன்ற கட்டட தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்றம் நாளை காலை மீண்டும் கூடும் போது, நாம் நாளைய தினத்திலும் ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளோம்.
இன்று நாம் சட்டவிரோத பிரதமரின் செயலாளருக்கு நிதிச் செயற்பாடுகளில் ஈடுபடத் தடை விதிக்கும் பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றினோம்.
அதேபோல் நாளைய தினத்தில் சட்டவிரோத அமைச்சர்களின் செயலாளர்களுக்கு நிதிச் செய்பாடுகளில் ஈடுபட தடை விதிக்கும் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றுவோம்.
நிதி செயற்பாடுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றிலேயே எடுக்கப்படும். நாடாளுமன்றில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்டால் அதுவே அங்கிகரிக்கப்பட்டதாக அமையும்.” என கூறினார்.
No comments:
Post a Comment