பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க விரும்புவதாக வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வசந்த சேனாநாயக்க நேற்று தெரிவித்தார்.
அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று (31) சுற்றுலாத்துறை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருக்கும் நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சர் வசந்த சேனாநாயக்க இங்கு மேலும் கூறியதாவது, நான் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகவில்லை. தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்கின்றேன்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டமைக்காக என்னை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ அல்லது அதன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தோ விலக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகாமல் இன்னுமொரு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கும் முதல் நபர் நான் அல்ல. ஜயசூரியவும் முன்னொரு சந்தர்ப்பத்தில் நாட்டின் அவசியம் கருதி இவ்வாறு செய்திருந்தார்.
நாட்டுக்கு நல்லதொரு அரசாங்கம் வேண்டும் என்பதற்காகத் தான் நான் இந்த அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தேன். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
டி.எஸ் சேனாநாயக்க, டபிள்யு.சேனாநாயக்க ஆகியோரின் காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது முழுமையான விருப்பம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment