தேங்காய் பறித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

தேங்காய் பறித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

தலையில் தேங்காய் விழுந்து பெண்ணொருவர் மயக்கமுற்ற நிலையில் நேற்று 30 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தனது வீட்டில் கம்பியை பாவித்து தேங்காய் பறித்துக்கொண்டிருந்தபோது தேங்காய் தலையில் விழுந்து அவ்விடத்திலேயே மயக்கமுற்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதனை அடுத்து அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு தலையில் தேங்காய் விழுந்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாயான ரிஷாந்தி சந்தமாலி (28 வயது) எனவும் தெரியவருகின்றது.

பெண்ணின் தலையில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சீட்டி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment