யாழில் வாளுடன் கைதான இளைஞருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

யாழில் வாளுடன் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் சுமார் 4 அடி நீளம் கொண்ட வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகநபர் யாழ். நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தியபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கோண்டாவில் பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் மகனால் தனக்கு அச்சுறுத்தலென கடந்த வாரம் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் பிரகாரம் விசாரணை நடத்தச் சென்றிருந்த பொலிஸார், வீட்டில் கூரிய வாளொன்றை மீட்டனர். அதன் பிரகாரம் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் அவரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, சந்தேகநபர் அயலிலுள்ள ஆலயத்தின் வழிபடுவோர் சபை உறுப்பினராக உள்ளார் என்றும், விரைவில் ஆரம்பமாகவுள்ள நவராத்திரி திருவிழாவின்போது இடம்பெறவுள்ள வாழை வெட்டு உற்சவத்திற்காகவே வாளை தீட்டுவதற்காக கொண்டுவந்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும், குறித்த வாதத்தை நிராகரித்த நீதவான் விசாரணகள் நிறைவடையும்வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment