வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்களை சீகிரியா பொலிஸார் நேற்று (26) கைது செய்தனர்.
No comments:
Post a Comment