இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

கொழும்பு - சிலாபம் பிரதான வீதியின் கொஸ்வாடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (27) அதிகாலை 3 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் அதற்கு எதிர்திசையில் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் மாதம்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பாலவி, கரம பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஹெவிரிதி ஜோசன் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் தனியார் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment