அண்ணாவிடம் புறப்பட்டார் அன்புத்தம்பி - கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 8, 2018

அண்ணாவிடம் புறப்பட்டார் அன்புத்தம்பி - கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தலைவர்கள், பொதுமக்கள் ராஜாஜி மண்டபத்தில் வைத்து அஞ்சலி செலுத்தியதை அடுத்து, அண்ணா சதுக்கம் நோக்கி அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

பின்னர், இன்று (08) அதிகாலை 1 மணிக்கு சிஐடி காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தை அடைகிறது. அங்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர், அண்ணா சமாதிக்கு பின்புறம் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தொடர் செய்திகளை பார்வையிட
https://www.newsview.lk/2018/08/6863.html
http://www.newsview.lk/2018/08/4_8.html
http://www.newsview.lk/2018/08/blog-post_863.html
http://www.newsview.lk/2018/08/blog-post_849.html
https://www.newsview.lk/2018/08/blog-post_925.html
http://www.newsview.lk/2018/08/blog-post_361.html
http://www.newsview.lk/2018/08/blog-post_448.html

No comments:

Post a Comment