தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட 3,050 மத்திய நிலையங்களில் நடைபெற்ற பரீட்சை காலை 9.30ற்கு ஆரம்பமாகி, நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுவடைந்தது.
இம்முறை பரீட்சையில், 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தனர். விடைத்தாள்களை மதிப்பிடும் பணி இம்மாதத்திற்கு முன்னர், ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்தார்.
இதேவேளை புலமைப்பரிசில் வினாப்பத்திரம் இரகசிய ஆவணம் என்பதனால் இந்த வினாப்பத்திரத்தை வைத்திருந்தல், பிரதி பண்ணுதல், பிரதி பண்ணப்பட்ட பிரதியை வைத்திருத்தல், விற்பனை செய்தல், அச்சிடுதல், பத்திரிகைகளில் வெளியிடுதல், வார சஞ்சிகைகளில் வெளியிடுதல் ஆகிய தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். சமூக இணையத்தளத்தில் அல்லது வேறெந்த வகையிலும் இதனை பகிரங்கப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவரேனும் அல்லது நிறுவனங்கள் இந்த உதரவை மீறும் பட்சத்தில் அது தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்திற்கு அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக பரீட்சைகள் திணைக்களத்துடன் 1901 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
No comments:
Post a Comment