புதிதாக அமைக்கப்பட்ட 102 ஆவது மாதிரிக்கிராமமான ‘லூர்து நகர்’ கிராமம் மக்களிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 5, 2018

புதிதாக அமைக்கப்பட்ட 102 ஆவது மாதிரிக்கிராமமான ‘லூர்து நகர்’ கிராமம் மக்களிடம் கையளிப்பு

மன்னார் மாவட்டம் நானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்ட 102 ஆவது மாதிரிக்கிராமமான ‘லூர்து நகர்’ கிராமம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) காலை 10.30 மணியளவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 23 வீடுகளை வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு ‘லூர்து நகர்’ கிராமத்தை வைபவ ரீதியாக மக்களிடம் கையளித்தார்.
குறித்த வீடுகள் திறப்புவிழா நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், வடமாகாண அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.மோகன்ராஸ் உற்பட பிரதேசை சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட 1093 பயனாளிகளுக்கு சுய தொழில் உபகரணங்கள், மற்றும் கடன் திட்டத்திகாக தலா ஒரு இலட்சம் ரூபா பணம் கடன் அடிப்படையில் காசோலையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment