பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலும், மட்டக்களப்பிலும் கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு! - News View

About Us

About Us

Breaking

Thursday, July 5, 2018

பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலும், மட்டக்களப்பிலும் கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டிதுறை மண்ணில் கரும்புலி நாள் நினைவு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

ஜீலை 5 ஆம் திகதி புலிகளினால் கரும்புலி நாளாக கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதிகளில் எழுச்சியாக நடைபெற்று வந்தன.

ஆயினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரமாண இந் நினைவு நாள் மிகவும் இரகசியமாக ஒரு சில இடங்களில் மட்டுமே அனுஷ்டிக்கப்பட்ட வந்தன.

இந் நிலையில் கரும்புலி நாள் நிகழ்வுகள் இம் முறை யாழ்ப்பாணத்தில் மிக உணர்வு பூர்வமாக இடம் பெற்றிருக்கின்றன.புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந் நினைவு அனுஸ்டிப்புக்கள் இடம்பெற்றன.
இதற்கமைய முதற் கரும்புலி மில்லர் வீரச்சாவடைந்த நெல்லியிடி பாடசாலைக்கு முன்பாக இன்று மதியம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி கரும்புலிகள் நினைவு கூரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை புலிகளின் தலைவர் பிரபாகரனினது சொந்த இடமான வல்வெட்டிதுறையிலும் கரும்புலிகள் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.

வல்வெட்டிதுறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மாவீர்ர் சங்கரின் நினைவிடத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மிக உணர்வு பூர்வமாக கரும்புலிகளின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) கரும்புலிகள் தின நிகழ்வுகள் வாகரை கதிரவெளி பிரதேசத்தில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பேச்சாளர் எம்.புவிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் ஒருங்கிணைப்பாளர் இ.வசந்தபாபு மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள்இ போராளிகள் குடும்பத்தினர் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவீரரான கரும்புலிகளின் நினைவாக கடற்புலி மாவீரர் விநாயகம் இளையதம்பி அவர்களின் தயாரான விநாயகம் தவமணி அவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவரினாலும் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

அதன் பின்னர் கதிரவெளி பிரதேசத்தில் கடற்புலி மாவீரரான விநாயகம் இளையதம்பி (மேஜர் கண்ணாளன்) அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பேச்சாளரினால் கரும்புலிகள் தின கவிதையொன்றும் நிகழ்த்தப்பட்டது.

No comments:

Post a Comment