சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் - மாவை எம்.பி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் - மாவை எம்.பி தெரிவிப்பு

சமூக விரேத செயல்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் வட மாகாண ஆளுநர் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 09 ஆம்திகதி திங்கட்கிழமை யாழில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கில் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூக விரோத செயல்கள் இடம்பெற்ற வண்ணமுள்ளது. அண்மையில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்தப் பின்னணியில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாதிருப்பதற்கும் மக்களுக்கு விழிப்பணர்வுகளை ஏற்படுத்தும் நோக்குடன் அரச சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் அதிகாரிகள், பொலிஸார் மற்றும் முப்படை பிரதானிகள் மற்றும் சமூக சேவை திணைக்களங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய சந்திப்பு இடம்பெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை வட மாகாண ஆளுநர் றொஜினோல்ட்குரேயுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment