மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளுடன் முக்கிய சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளுடன் முக்கிய சந்திப்பு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள சிவில் சமூக அமைப்புகளின் குழுவுக்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கும் இடையில் எதிர்வரும் 5ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த குழுவில் அங்கம் வகிக்கும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பல அமைப்புக்களினாலும் கட்சிகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட சில மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் காலாவதியாகியுள்ள நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment