காத்தான்குடியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் சமூக ஜோதி என பட்டம் வழங்கப்பட்டு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர். அதில் காத்தான்குடி பாவலர் சாந்திமுகைதீனுக்கு தேசிய ஜோதி என பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
காத்தான்குடியைச் சேர்ந்த புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலின் இமாம் மௌலவி ஆதம்லெவ்வை(முஸ்தபா) பலாஹி தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் ஆரையம்பதி முகாமையாளரும் சமூக சேவையாளருமான பொறியியலாளர் சமட், சமூக சேவையாளரும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதியும் மத்தியஸ்த சபையின் உறுப்பினருமான லத்தீப் ஹாஜியார், சிகரம் பிரதேச முக்கியஸ்தரும் சமூக சேவையாளரும் ஆரைமயம்பதி பிரதேச மத்தியஸ்த சபையின் உறுப்பினருமான எம்.வை.ஆதம், சமூக சேவையாளர் ஏ.எல்.நசீர் அககமட் வர்த்தகர் சரண்டிப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.உவைஸ் ஆகியோருக்கே இந்த சமூக ஜோதி பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் சமாதான நீதவான்களாகும்.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இந்த பட்டம் இவர்களுக்கு வழங்கப்பட்டது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment