ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ரகானே - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 1, 2018

ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ரகானே

தொடக்க வீரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைக்க முடியாத வீரர் என்ற மோசமான சாதனையை ரகானே படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 152 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நேர்த்தியான பந்து வீச்சு, களத்தடுப்பால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ஒட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே 53 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ஒட்டங்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு ஒரு முறையும் தொடக்க வீரராக களம் இறங்கி 50 ஒட்டங்களுக்கு மேல் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ரகானேயால் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போன சம்பவம் நடைபெற்றுள்ளது. இவ் ஆட்டம் மூலம் 2-வது முறையாக ரகானேயால் வெற்றி பெற வைக்க முடியாமல் போகியுள்ளது.

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை தொடக்க வீரராக களம் இறங்கி, 50 ஒட்டங்களுக்கு மேல் ஓட்டஙகுவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைக்க முடியாத ஒரே வீரர் என்ன மோசமான சாதனையை ரகானே படைத்துள்ளார்.

No comments:

Post a Comment