குருணாகல் நீர்ப்பாசனம் மற்றும் சுகாதார திட்டத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் பார்வையிட்டுள்ளார். அமைச்சின் அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று காலை அந்தப் பகுதிக்கு விஜயம் செய்தார்.
பாரிய குருநாகல் நீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இன்று (05) செயற்திட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது கழிவு நீரை சுத்தமான நீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். இது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது திட்டமாகும். 13, 250 மில்லியன் ரூபா செலவில் குருநாகல் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தpன் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் தறவாயில் உள்ளது.
சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் குருணாகல் நீர்ப்பாசன திட்டம் மற்றும் சுகாதார திட்டத்தின் நிரமாணப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்து வருகின்றன. 190 கிலோமீற்றர் நீர் வள கட்டமைப்பின் மூலம் 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள ஒரு இட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு இதன் மூலம் நீர் விநியோகம் இடம்பெறதுள்ளதுடன் நாளாந்தம் குருணாகல் நகருக்கு வருகை தரும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இயற்கை கழிவு சேவைக்கான வேலைத்திட்டமும் இதற்கு அமைவாக முன்னெடுக்கப்படுகிறது. குருணாகல் நகர பிரதேசத்தில் இதுவரை காலமும் நிலவி வந்த பாரிய குறைப்பாடு இந்தத் திட்டத்தின் மூலம் புரனப்படுத்தப்படுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
குருணாகல் வைத்தியசாலையும் இந்தத் திட்டத்டதின் மூலம் நேரடியாக பயன்கள் கிடைக்கின்றன. நாட்டின் மேலும் முக்கிய நகரங்களில் இவ்வாறான நீர்பாசன மற்றும் சுகாதார திட்டங்களை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். கந்தான்குடி, கல்முனை மற்றும் திருகோணமலை நகரங்களும் இவ்வாறான திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் குருநாகல் நகரை சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள நிலக்கீழ் நீர் சுத்தமடைவதுடன் கழிவு நீரினால் ஏனைய நீர் வளங்கள் பாதிப்படைவது முற்றாக தடுக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார்இ பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ் செயற்திட்ட முகாமையாளர் டி.வி. மெதவத்த உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment