அண்டாடம் முக்கிய பல நிகழ்வுகளில் நாம் பல வித்தியாசமான பல மனிதர்களைச் சந்திக்கின்றோம். இன்றைய நாளில் என்னைக்கவர்ந்த ஒரு நல்ல மனிதர், சமூகத்தைப்பற்றி சதாவும் சிந்திக்கும் எவரிடமிருந்தும் எந்த எதிர்பார்ப்புமில்லாமல், சமூக சேவைகள் பலதில் இலங்கையின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களில் தன்னை ஈடுபடுத்தும் ஓட்டமாவடி என்.எம்.முகம்மது அனஸ் தற்போதைய பாகிஸ்தானின் பிரதித்தூதுவர்.
இவர் 2009 ஆண்டில் இலங்கைக்கான முதல் கடல் கடந்த தனது சேவையினை குவைத் நாட்டில் ஆரம்பித்தார். இவரது இராஜதந்திரப் பயிற்சிக்களை ஜெர்மன், நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் முடித்ததுடன், சிறப்பாக பல மொழிகளில் உரையாடக்கூடிய இளம் ஆளுமைமிக்க மனித நேயமிக்க ஒருவர். இலங்கைக்கான பல இராஜதந்திரச் செயற்பாடுகளில் சர்வதேச ரீதியாக சிறப்பாற்றல் உள்ளவராகத் திகழ்கிறார்.
கடந்த காலங்களில் கிண்ணியாவின் பல ஏழைக்குடும்பங்களுக்கு உதவி செய்ததுடன், மனித நேயமிக்க இன்னும் பல விடயங்களையும் செய்துள்ளார். ஏழைகள், அநாதைகள், விதவைகள் எனப்பல தரப்பினருக்கு உதவி செய்யும் நல்லெண்ணதுக்காக இவருக்காகவும் இவரது குடும்பத்திற்காகவும் பலர் பிராத்தனை செய்து வருகின்றனர்.
கடந்த 17 வருடங்களுக்கு முன் காணமல் போன கிண்ணியா சகோதரியைக் கண்டறிய முடியாத நிலையிலிருந்த ஏழை விவசாயி ஒருவருக்கு மிக வேகமாகச்செயற்பட்டு இரண்டு நாட்களுக்குள் அவரது மனைவி தொடர்பில் விபரங்களை அறிய உதவி செய்தார். ஏழைகளின் உயர்வு பற்றியும் வறுமைக்கு உதவுவது பற்றியும் அடிக்கடி சிந்திக்கும் இவர் இரக்க சுபாவமுடையவராவார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த, மனித நேயமிக்க இவரைப் போன்ற ஆளுமைகளை அரசியலில் இனங்காண வேண்டியது காலத்தின் மிகப்பெரிய தேவையாகும்.
நேர்மையானவர்கள் உயர் பதவிகளில் காண்பது அரிது. தான் வாழும் சமூகம் ஏழ்மை களைந்து வாழ வேண்டுமென எண்ணும் நல்லெண்ணம் எல்லாருக்கும் இறைவன் அருளுவதில்லை. இவரின் உயரிய எண்ணத்துக்கும் தூய பணிகள் தொடரவும் எமது பிரார்த்தனைகள்.
றணீஸ் உபை (ஆசிரியர்)
கிண்ணியா
(thehotline.lk இணையத்தளம்)
No comments:
Post a Comment