ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி மாவடிவேம்பில் மே மாதம் 07 ஆம் திகதி பிற்பகல் மே தினக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மே மாதம் 07 ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பு செங்கலடி மாவடிவேம்பில் இடம்பெறும்.
'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளர் பலம்' என்ற கருப்பொருளின் கீழ் அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகை தரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மே தின கூட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட உழைக்கும் மக்களின் சலுகைகள் பலவற்றை வென்றெடுத்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும்.
மே தினத்துடன் இணைந்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தொழிற்சங்க தலைவர்களை பராட்டும் நிகழ்வும் அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மே தினத்தை விடுமுறை தினமாக ஆக்குவற்கு நடவடிக்கை எடுத்த முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க, அப்போதைய தொழில் அமைச்சர் டி.பி.இலங்கரத்ன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் காலஞ்சென்ற ஆனந்த தசநாயக்க, ஹேபர்ட் விக்கிரமசிங்க. அலவி மௌலானா, பாரத லஷ்மன் பிரேமசந்திர, முன்னாள் தலைமைச் செயலாளர் டி.சி.வீரசேகர ஆகியோர் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.05.04
No comments:
Post a Comment